வருஷத்திற்கு அதிகபட்சம் 2 குழந்தைகளைப் பெத்துக்கலாம் ஆனால் 24 முடியுமா? ஆண்களும் மகப்பேறு அடைய முடியுமா? உலக அதிசயமா இல்ல… இராஸ்தான் அரசு ஊழியர்களின் அற்புத சாதனையா என்பதை இனிவரும் செய்திகள் மூலம் உங்களுக்கே தெரியும்.
ராஜஸ்தான் கோட்டா நகரில் உள்ள கோகுண்டா மகப்பேறு மையத்தின் பதிவேடுகளின் படி குறைந்தது 32 ஆண்கள் குழந்தை பெற்றிருப்பதாக இதை விசாரிக்கும் விசாரணை அதிகாரி சொல்றாரு!.இம்மையத்தின் இயக்குநர்கள் வறுமை கோட்டுக்குக் கீழ வாழறபெண்களின் பிரசவத்திற்காக அரசு கொடுக்கும் உதவி தொகையைப் பெறுவதற்காக இதுமாதிரி கோல்மால்களில் ஈடுபட்டிருக்காங்க!
இதுல இன்னொரு கொடுமை என்னன்னா... சில ஆண்கள் பல தடவை குழந்தை பெத்திருக்காங்க!. இதில்லாம 60 வயசான மூதாட்டி ஓரே வருஷத்துல இரண்டு முறை தனித்தனியா குழந்தை பெத்துக்கிட்டிருக்காங்க. சீதாங்ற பெண் ஊழியர் லவா.. குசா..ன்னு இதிகாசத்துல வர்ற மாதிரி இரண்டோட நிறுத்திக்காம அவர் மட்டுமே ஓரே வருஷத்தில 24 தடவை குழந்தை பெத்திருக்காரு. இந்த ஊழலை குறித்து விசாரிக்க மூன்று மூத்த மருத்துவர்களைக் கொண்ட குழுவை அரசு நியமிச்சிருக்கு.
எப்படித்தான் இப்படி புதுசு புதுசா யோசிக்கறாங்களோ..!?!?
மூலம்: http://www.inneram.com/2011072318041/males-delivering-babies-in-india இத்தகவல் தளத்திற்கு நன்றி!