செவ்வாய், 11 செப்டம்பர், 2012

நடந்து போக பாதை இல்லையா?!... ஹிட்லர் முதல் சாப்ளின் வரை

’எழுதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்பது என் கல்லூரி கால சுலோகமாக இருந்து வந்தது. மாணவ பருவத்திற்கு பின்னர் நமக்கு தான் எத்தனையெத்தனை வகையினில் கிடைக்கும் நேரத்தினை பகிர வேண்டியுள்ளது!?   எழுதும் போதும், பகிரும் போதும் என்னுள் எழும் புத்துணர்வு அளவிடற்கரியது.  சின்ன இடைவெளிகளுடன் இனி தொடர்வேன் எனும் நம்பிக்கையில் என் மனதைக் கவர்ந்த தலைவர்களின் பொன்மொழியினை தங்கள் முன் பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்கின்றேன்.





















மின் அஞ்சல் மூலமாக பகிர்ந்து கொண்ட முகமது ஃபையசுல்லா அவர்களுக்கும், இப்படைப்பினை உருவாக்கிய முகமறியா தோழருக்கும் மனமார்ந்த நன்றிகள் !
Download As PDF

புதன், 2 மே, 2012

இதப் படிச்சுட்டும் சிரிக்காதவங்களுக்கு… பரிசு!




கீழே வர்ற இந்த சின்ன கதையை படிச்சுட்டு சிரிக்காம இருக்கறவங்களுக்கு, 1 குச்சி மிட்டாயும், 3 குருவி ரொட்டியும் இலவசமாக தருவதாக ஒரு அறிவிப்பு வந்துருக்குங்க. நாஸ்தா பிரியர்களுக்கும் நகைச்சுவை உணர்வு மங்கியவர்களுக்கும் ஜமாய்ச்சிட நல்ல ஒரு வாய்ப்பு!  நழுவ விட்டுடாதிங்கோ!! சமீபத்துல மக்கள் மன்றத்துல, அதாங்க பார்லிமெண்ட்ல நடந்த கதை தானுங்க…. இதோ மீதி உங்கள் பார்வைக்கு!


மக்களவையில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் பேசும் போது நம்ம பாக்யராஜ் ஸ்டைல்ல ஒரு குட்டிக் கதையை சொன்னாருங்க. அவர் சொன்ன கதையை அப்படியே நீங்களும் கேட்டுக்கோங்க…

”அதாவது…. ஒரு தந்தை தனது 3 மகன்களிடமும் 100ரூபாயினை தந்து அவருடைய அறை முழுவதும் நிரம்பும் படியான பொருளை வாங்கிட்டு வரச் சொன்னாருங்க.   உடனே அவரோட முதல் மகன் ஏதோ ஒன்னு வாங்கி வந்தாருங்க. ஆனா, அது ஒரு குட்டி கப்போர்டு சைஸைக் கூட நிரப்பலிங்க.  உடனே இரண்டாவது மகன், இலவம் பஞ்சா வாங்கி வந்து அறை முழுவதும் நிரப்ப பார்த்தாருங்க.  ஆனாலும்  அந்த முயற்சியும் அவுட்டாகி போச்சுங்க.  மூணாவது மகன் நேரா கடைக்கு போயி ஒரு ரூபாய்க்கு மெழுகுவர்த்தி வாங்கிவந்து தந்தையோட அறையில ஏத்துனாரு பாருங்க... உடனே வெளிச்சம் பளிச்சுன்னு அறை முழுவதும் நிரம்பிடுச்சு!

இந்தக் கதையை சொல்லிட்டு கம்பீரமா அவை உறுப்பினர்களை பார்த்துகிட்டு, தன் தொண்டையைக் கனைச்சுகிட்டு அந்தக் காங்கிரஸ் எம். பி, கொஞ்சம் எம்பி தன்னோட மாஸ்டர் பீஸை சொறுவுனாரு பாருங்க...    

“இந்தக் கதையில வர்ற மூணாவது மகனைப் போல தான் நம்ம பிரதமர் மன்மோகன் சிங். அவர் பதவியேற்ற நாளிலிருந்து நம் இந்தியா முழுவதும் ஒளிவீசத் தொடங்கிவிட்டது!

இத சொல்லி முடிச்சுட்டு அப்பளத்துக்காக, சாரி அப்ளாசுக்காக காத்திருந்தவருக்கு கடைசிபெஞ்சு வழியா ஒரு ஆப்புதாங்க வந்தது.  அது என்னான்ன….

கடைசி பெஞ்ச்:  “அடுங்கொய்யால….  பாக்கி 99ரூபாய் எங்கலேய் போச்சு…?”



ஹி. ஹி… இந்தக் கதையை மின் அஞ்சல் வழியாக எனக்கு கிச்சு கிச்சு மூட்டி ஒரு குச்சி மிட்டாயும் 3 குருவி ரொட்டியும் தர விடாம பண்ணின நண்பர் திரு. ஜெயராமன் அவர்களுக்கும், இதனை வடிவமைத்த மூலகர்த்தாவிற்க்கும்ஒரு பெரிய கும்புடு போட்டுகிட்டு நன்றியும் சொல்லிகிட்டு நான் நடையைக் கட்டறேனுங்கோ…
Download As PDF

திங்கள், 27 பிப்ரவரி, 2012

வாங்க… வளைகுடா கார்ட்டூன்களைப் பார்க்கலாம்! – 6

பணவீக்கம் என்பது நம் நாட்டில் மட்டுமில்லீங்க... உலகையே ஆட்டி படைக்குதுங்க.  இதற்கு மனிதத் தவறுகளே என்பதை சம்பந்தப்பட்டவர்களே ஒப்புக்கறாங்க. ஆனா... நம்ம ஆளுங்க மட்டும் இன்னமும் தம் கட்டி அடுத்தவங்கள் தோளில குறையத் தொங்க விடறாங்க.  ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார சரிவும்,  சிரியாவின் மக்கள் போராட்டமும், ஈரானின் அணு ஆயுத உற்பத்தியும் வளைகுடா நாட்டினில் பெரும் தாக்கத்தினை கொண்டுள்ளது.  அதன் விளைவே அந்நாட்டு ஊடகங்களில் இது போன்ற கருத்து படங்கள்.  

எழுதுவதற்கு நிறைய விஷயங்களும் விமர்சனங்களும் இருக்குங்க. ஆனா, நேரம் தான் நமக்கு தோது படல. அதனால.... கிடைக்கற நேரத்துல அப்பப்ப பகிர்ந்துக்கிறேன்.  (யாரங்கே... பெருமூச்சு விடறது. விடாது கருப்பு! விரைவில் அடுத்த பதிவினில் சந்திப்போம்!)


ஹி...ஹி... பணவீக்கம் நம்ம நாட்டுல மட்டுமில்லீங்கோ... வளைகுடாவிலும் தான்


எப்படி பார்த்தாலும் ஈரானைச் சுத்தியே அணைகட்டுதே இந்த மேற்குலகம்...


சிரியாவில் தொடரும் பொதுமக்கள் போராட்டம்


ஈரானும், இஸ்ரேலும் தொடர்கின்றது அணு ஆயுத உற்பத்தியினை


உலகின் மக்கள்தொகை 700 கோடியைத் தாண்டிவிட்டது. இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி. அப்ப உலகுல ஏழு பேருல ஒரு ஆளு நம்ம ஆளு! 



கிரிஸைத் தாக்கிய நிதிநெருக்கடி இத்தாலியையும் நெருக்குகின்றது.  


யூரோ சரிந்திடாது இருக்க ஐரோப்பிய ஒன்றியம் பெருமுயற்சிக் கொள்கின்றது


மனித உரிமைச் சர்ச்சையில் இருக்கும் குவாண்டனமோ துவங்கி 10 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.


வளர்ச்சியல்ல... வீக்கமே என்று  மேற்குலக நடுத்தர வர்க்க மக்கள் பங்குச் சந்தைக்கு எதிராக போராடுகின்றனர்.




கூடிய விரைவில் யூரோவும் ’ஹைய்யோ’ தானோ!?


மனிதர்களின் மனதில் ஒரு வலுவான கருத்தாக்கத்தை பதியவைப்பதில் பேச்சின் / எழுத்தின் பங்கை விட, மிக எளிதான முறையிலான கார்ட்டூன்களின் பங்கு முதன்மையிடத்தினைப் பெற்றுவிடுகின்றது. இதனை பிரசுரித்த அரேப் நியூஸ் நாளிதழ் இதழிற்கும், கருத்தோவியம் வரைந்த ஓவியர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!


Download As PDF

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

இப்படியும் ஆக்கிடுவாங்களோ நம் தேசிய சின்னங்களை….? கலாய்க்கும் கார்ட்டூன்கள்

காண்பதற்கு இக்கார்ட்டூன்கள் குபீர் சிரிப்பை வரவழைத்தாலும் நம் நாட்டு நடப்பை எண்ணி வேதனையடையவும் செய்கின்றது நம் மனம்.  இதுபோன்ற கருத்துப்படங்களால் நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்ளலாமா என ஆய்வதை விட்டுவிட்டு இத்தகைய மோசமான நிலையினை எப்படி சரிசெய்யலாம் என சிந்திப்பதே உத்தமம் என்பது என் எண்ணம். உங்களுக்கும் அப்படித்தானே! 



நேதா’ என்றால் இந்தியில் அரசியல்வாதி









” சத்யமேவ ஜெயதே” - தமிழில்  ’வாய்மையே வெல்லும்’


மின் அஞ்சலில் எனக்கு அனுப்பிய நண்பர் திரு. ஆனந்த சீனுவாசன் அவர்களுக்கு நன்றி!  மற்றும் இந்த கேலிச்சித்திரத்தினை வரைந்த ஓவியருக்கும், இதனை பிரசுரித்த இணைய தளங்களுக்கும் நன்றி! நன்றி!!

இவையெல்லாம் எப்போதோ மின்னஞ்சலில் வந்து சென்ற ஓவியங்கள் என நினைவு கூறும் வேளையினில் இன்னமும்  குறிப்பிடும் வகையினில் மாற்றம் எதுவும் நிகழவில்லையே என வருந்தவும் செய்கின்றது மனம்.


Download As PDF

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

தை பிறக்கட்டும்... இயல்பு நிலை எய்தட்டும்...!

Download As PDF

வெள்ளி, 6 ஜனவரி, 2012

கார்ட்டூன்களைப் பாருங்க... குலுங்குவதோ, குமுறுவதோ உங்க இஷ்டமுங்க-19

தானே புயல் வந்து தாறுமாறாய் புதுவையையும் தமிழகத்தையும் வரலாறு காணாத அளவில் புரட்டி போட, போர்க்கால அடிப்படையில் நடக்க வேண்டிய நிவாரணப்பணிகள் மெத்தனமாக நிகழ்கின்றது.  இயற்கையின் சீற்றத்தினை ஒப்புக்கொள்வதிலோ துரிதமாக நிவாரணப் பணிகளை முடக்கிவிடுவதிலோ அரசு இயந்திரங்கள் முனைந்திடாமல் ஊடகங்கள் வாயிலாக பொய் பிரச்சாரம் செய்து தமிழக முதல்வரின் நன் மதிப்பினை பெறவே முயற்சிக்கின்றனர். சுனாமியால் உயிர்சேதம் எந்த அளவிற்கு இரணத்தினை உண்டு பண்ணியதோ அதே போல் தானே புயல் பொதுமக்களின் வாழ்வாதாரத்தினை புரட்டி போட்டுள்ளது. அண்டை மாவட்ட மக்களோ அல்லது மாவட்ட ஆட்சியினரோ தமக்கும் அதற்கும் சம்பந்தமில்லாது இருப்பது கண்டனத்திற்குரியது. 

"எரிகின்ற வீட்டில் பிடுங்குகிற வரை இலாபம்" என்பது போல் அரசு நிர்ணயித்துள்ள  நிவாரணத் தொகையினில் கூட கை வைத்தும், பாரபட்சத்துடனும் செயல்படுவதினை சமீபத்திய சாலை மறியல்கள் நிரூபிக்கின்றன.

கடுமையான மின்பாதிப்பினை சமாளிக்க கடலூர் மாவட்ட மக்கள் மெழுகுவர்த்தியினைக் கூட பெறுவதற்கு பட்ட பாடு வேதனைக்குரியது. 

சரி, நாம் கார்ட்டூனை பார்த்து வழக்கம் போல்……. கு….. கு….வது உங்க இஷ்டமுங்க...!



















சிந்தனையையும், வந்தனையையும், நிந்தனையையும் தூரிகைகளில் உயிர்ப்பித்த ஓவியர்களுக்கும் அதனை பிரசுரித்த துக்ளக், தினமணி, விகடன், கல்கி  ,... போன்ற அனைத்து தமிழ் இதழ்களுக்கும் நன்றியோ நன்றிகள்!!
Download As PDF

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

சராசரியாய் கழிந்துவிடாமல்... 2012

தன்னானே.. தானேநன்னே..!!” என
தாளம் போட்டு ஆட்டமிட்டு
ஆனந்தத்துடனே நாம்
ஆங்கிலப் புத்தாண்டினை
 
 
வரவேற்கவே நினைத்திருக்க….
 
 
 தானேஎனும் புயல் வந்து
தாறுமாறாய் தாக்கிட
பூமித் தாயினை
புண்ணாக்கி மகிழ்ந்திட
 
 
மீனவர்களும் விவசாயிகளும்
இன்ன பிற சமூகத்தாரும்
மீளாத்துயரினிலே
மூழ்கியிருக்கும் வேளையிலே
முல்லைப் பெரியாறு முதல்
கூடங்குள அணு உலை வரை
இலங்கைத் தமிழர் முதல்
இந்தியத் தமிழர்கள் வரை
 
 
சந்திக்கும் சோதனைகளை
சாதனையாய் ஆக்கிடுவாயா!
சராசரியாய் கழிந்துவிடாமல்
சரித்திரம் தான் படைத்திடுவாயா!?

களிப்புடனே உன் வரவினை
கொண்டாடிட இயலாதிடினும்
புதிதாய் பூத்திட்ட உன்னை
புன்னகையுடன் வரவேற்கின்றோம்!.
 
 
வருகவே   வருக   2012!!
Download As PDF