ஞாயிறு, 19 ஜூன், 2011

ஆறிய கஞ்சி தான்! ஆனாலும் சுவை உண்டு!! - நீரா இராடியா



ஸ்பெக்ட்ரம் புகழ் "நீரா ராடியா"விற்க்காக, தலைவர்களையும் அறிஞர்களையும் சிறப்பித்து அஞ்சல் தலை வெளியிடுவது போல தற்போது இன்டெல் நிறுவனம் அவரின் மதியூகத்தையும், செயலாக்கத்தையும் கௌரவிக்கும் பொருட்டு ஒரு மதர் போர்டு உருவாக்கினால் எப்படியிருக்கும்? சிந்தித்தவரின் கைவண்ணத்தினைக் காணுங்கள்!



தொலை தகவல் தொடர்பு துறை மட்டுமின்றி, எரிவாயு, ஆற்றல், விமானப் போக்குவரத்து மற்றும் சுரங்கத்துறை என சகலத் துறைகளுக்கும் நீரா ராடியா மையப்புள்ளியாய் இருந்து அரசியல்வாதிகளுக்கும், தொழிலபதிர்களுக்கு உறவுப்பாலமாக திகழ்ந்ததை சித்தரிக்கின்றது





மின் அஞ்சல் மூலம் எனக்கு அனுப்பி வைத்த நண்பர்களுக்கு நன்றி! அதீத கற்பனையுடன் எளிய பாமரர்கள் முதல் கற்றறிந்த கல்வியாளர்கள் வரை ஓவியம் மூலம் மிகவும் எளிதாக புரியவைத்த அந்த முகம் தெரியாத கலைஞனுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்!



குறிப்பு: ஸ்பெக்ட்ரம் என்றாலே அகில இந்திய அளவில் கனிமொழியையும், கருணாநிதியையும் முதன்மைப்படுத்தி ஆ. இராசாவினை பலிகடாவாக்கியது போல இந்திய ஊடகங்கள் அனைத்தும் சித்தரிக்கின்றன . உண்மையென்னவெனில், இவர்களையும் தாண்டி கட்சி பாகுபாடின்றி, வர்க்க பேதமின்றி, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தொழில் அதிபர்களும் இணைந்த 'கை'களுடன் மக்களைக் கூட்டணியாக சுரண்டியது தெரியவரும்.

ஒளிக்கற்றை ஊழலுக்காக ஆ.இராசா, கனிமொழி என பல முக்கியத் தலைகளும் உள்ளே இருக்க, ஜாமீனும் மறுக்கப்பட  தரகரான நீரா இராடியா மட்டும் எப்படி வெளியே உல்லாசமாக உலா வருகின்றார் என நீங்கள் சிந்தித்தால்... சில புதிர்களும் காங்கிரஸின் கயமைத்தனமும் புலப்படும்.


Download As PDF

1 கருத்து:

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.