வியாழன், 22 டிசம்பர், 2011

அவசியம் தெரிஞ்சுக்கோங்க - சவூதியில் பணிபுரிய விரும்பறவங்க...



”அரையணா சம்பளம்ன்னாலும் அரசாங்க உத்யோகத்துல இருக்கறவனுக்கு பெண்ணைக்கொடு!” என்கின்ற முந்தைய நிலை மாறி ”என் பெண்ணை ஃபாரின் மாப்பிளைக்குத் தான் கொடுக்கணும்ன்னு இருக்கேன்” என்று கூறுமளவிற்கு ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகை பெருகிவிட்டனர் என்பது இன்றைய யதார்த்தம். பெண் தேடும் படலத்திற்கு என்றிராவிட்டாலும் பொதுவாக “வெளிநாட்டில் வேலைசெய்வது” என்பது நம்மில் பலருக்கு ஒருவித கனவு இருக்கத்தான் செய்கின்றது.  ”திரைகடலோடி திரவியம் தேடு!” என்று கூறிய நம் மூதாதையர்களின் மரபணுக்களின் வசியம் தான் இக்கனவா என்பதை கண்டறிவது இப்பதிவின் நோக்கமல்ல.. 
 நாம் எந்தவொரு பணியையும் துவக்குவதற்கு அதன் தன்மையை உணர்தல் அவசியம்.  இந்தியாவினை போலவே அனைத்து வெளிநாட்டிலும் தொழிலாளர் சட்டங்கள், சமூக நடைமுறைகள் இருக்கும் என்று எண்ணுவது மடமை. ஆதலால், நாம் எந்தவொரு நாட்டிற்கு செல்ல விழைகின்றோமோ, அங்குள்ளோரிடம் கருத்துக் கேட்பது மிகவும் நல்லது.  நாம் செல்லவிருக்கும் நாட்டின் தூதரகங்கள் வாயிலாக அறிவுரைப் பெற்றுவிட்டால், அங்கு கிடைக்கும் பணியும் மற்றுமுள்ள சூழலும் நமக்கு பொருந்துமா என்பதினை முன்கூட்டியே அறிந்திடலாம். அதன் மூலம் வருங்காலத்தில் தேவையற்ற சிக்கலில் சிக்காமல் மகிழ்வுடன் வாழ்வை தொடரலாம்.

சவூதி அரேபியாவிலுள்ள ஜெத்தா மாநகர அயலக தூதரகத்தின், சவூதியில் பணிபுரிய விழையும் அயல்நாட்டு மக்களுக்கான அறிவுரையை, சென்னையை சேர்ந்த திரு. ஜெயக்குமார் மொழிபெயர்த்துள்ளார். அதனை எனக்கு அனுப்பிவைத்த என் நெருங்கிய நண்பர் திரு. ஜோசப் செல்வன் அவர்களுக்கு நன்றியை செலுத்தி தங்களுடன் பகிர்கின்றேன். 









Download As PDF

6 கருத்துகள்:

Thozhirkalam Channel சொன்னது…

தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..

வாழ்த்துக்களுடன்

RAMA RAVI (RAMVI) சொன்னது…

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி மூர்த்தி.

Unknown சொன்னது…

அருமையான தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான, பயனுள்ள பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். உங்கள் நல்ல சேவை தொடர மனப்பூர்வ வாழ்த்துகள்.

rajamelaiyur சொன்னது…

படித்து கருத்துகளை சொல்லுங்கள்


2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?

பெயரில்லா சொன்னது…

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு